1:33 AM

Warm and Wet

Posted by Unknown |


பல நூறடி ஆழத்திலிருந்து மெல்ல அது கிளம்பியது, புகை போல.

நேராக மேலேறிச் சென்று மூளையின் எல்லா மடிப்புகளையும்

தேடித்தேடித் தனக்குரிய வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டது.

இறகு போல் சுழன்று வந்து என் நாக்கின் மேற்பரப்பில் வந்தமர்ந்தது.

லாவகமாய் தொடுக்கப்பட்ட அம்பாக, உன்னைத் தாக்கி நிலைகுலையச்

செய்யும் என நான் நினைத்திருந்தேன். ஆனால்...

என்னை ஏமாற்றி, வாழ்நாளில் நான் கண்டிராத கனிவுடன்

உதிரும் மலர் போல மெத்தென வெளிவந்தது.

அப்போது நான உன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அத்தனை ஆழத்திலும் ஈரம் இருக்கிறது போலும்..,

இல்லை, அத்தனையுமே ஈரம் தானா!

0 comments:

கருத்துரையிடுக